2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அச்சுவேலி தரவை பகுதியில் தீ விபத்து!

உள்ளூர்June 13, 2026 · 2 months முன்1

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அச்சுவேலி பகுதியில் காணப்படும் தரவை பகுதியில் காணப்பட்ட குப்பைக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டியதில் , கடும் காற்று காரணமாக தீ , தரவை பகுதியில் உள்ள புற்தரைகள் ஊடாக வேகமாக பரவியது.

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு ஊரவர்கள் அறிவித்ததை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் , தீயணைப்பு பிரிவினர் மற்றும் ஊரவர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ குடியிருப்பு பகுதிக்குள் பரவ முதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையால் ,பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஊரவர்கள் தெரிவித்தனர்.