2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மீகஸ்வெவவில் பரபரப்பு : சிசுவின் சடலம் மீட்பு

உள்ளூர்March 25, 2026 · 5 months முன்0

மீகஸ்வெவ, பள்ளியகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து பெண் சிசு ஒன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீகஸ்வெவ காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிசுவின் உடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்த பெண் சிசு உயிரிழந்து சுமார் இரண்டு நாட்கள் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடத்திற்கு வருகை தந்த நீதவான், ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். இதனைத் தொடர்ந்து, மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக சிசுவின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

உயிரிழந்த நிலையில் சிசு மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.