2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு

NEWS ALERTஉள்ளூர்February 21, 2026 · 6 months முன்1

2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் ஏனைய விடயங்களையும் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானத்தை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது.

2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு 13.56 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்பார்த்து, கடந்த 13 ஆம் திகதி இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2026ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்காக இலங்கை மின்சார சபையினால் 11.57 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பு முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.