2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

14 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கையளிப்பு!

உள்ளூர்June 19, 2026 · 2 months முன்1

பிரதேச செயலகங்கள் ஊடாகக் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதி நிதியத்தினால் இதற்காக 58 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது.

இதற்கமைய, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் சுமார் 30 மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி நிதியம் இதற்காக மொத்தமாக 98 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயைச் செலவிட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.