2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மாத்தறை முதல் பொத்துவில் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

உள்ளூர்August 7, 2026 · 1 week முன்1

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றது என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்ட பலத்த காற்று தொடர்பான ஆபத்தான வானிலை எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, மறுஅறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து மீனவர்களுக்கும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், ஏனைய பிரதேசங்களிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்படும் படகுகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை பெயரிடப்பட்டுள்ள ஆபத்தான கடற்பிரதேசத்திற்குள் நுழைவதையோ அல்லது அங்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

நிலவும் வானிலை நிலைமை குறித்துப் வௌியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பொறுப்புடன் செயற்படுமாறும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.