2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் சீருடைத் துணி நன்கொடை

உள்ளூர்July 16, 2026 · 4 weeks முன்1

இலங்கையின் அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் சுமார் 4.18 மில்லியன் மாணவர்களுக்கான 2027ஆம் ஆண்டுக்குரிய முழுமையான பாடசாலை சீருடைத் துணிகளைச் சீன அரசாங்கம் முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது. இதற்கமைய, 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான சீருடைத் துணியை வழங்குவதற்கான உத்தியோகபூர்வ உடன்படிக்கைச் சான்றிதழ்கள் பரிமாற்றம் நேற்று (15) பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷென்ஹொங் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ஆகியோருக்கிடையில் இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சான்றிதழ்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் உட்பட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.