2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மிளகு, கோப்பி, ஏலக்காய் செய்கைகளுக்கு நிதியுதவி

உள்ளூர்January 6, 2026 · 7 months முன்0

அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் செய்கைகளுக்கான உதவி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவையில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையால் சேதமடைந்துள்ள குறுங்காலப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு உதவி வழங்குவதற்குத் தேவையான ஆலோசனைகள் அடங்கிய சுற்றறிக்கை இலக்கம் 08/2025 மற்றும் 08/2025(1) இன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விவசாயத் துறையின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள நீண்டகால விவசாயப் பயிர்களை மீள் செய்கை செய்வதற்காக அப்பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டிருக்கின்ற செய்கையாளர்களுக்கு ஒரு ஹெக்ரெயாருக்கு உயர்ந்தபட்சம் 425,000/- ரூபாய் கொடுப்பனவை செலுத்துவதற்கும் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.