2026 August 15, Saturday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கட்டுமானப் பணியில் இருப்போர் கவனத்திற்கு!

உள்ளூர்May 10, 2026 · 3 months முன்0


தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த ஹோமாகம கைத்தொழில் வலையத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிற்கே இவ்வாறு முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது. 

கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த அதிகாரசபையின் அதிகாரிகளால் நேற்று (09) இந்தத் தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது, இந்தத் தொழிற்சாலை சுமார் மூன்று வருடங்களாக இந்த இடத்தில் இயங்கி வந்துள்ளமையும், அவர்கள் தமது ஏனைய உற்பத்திகளுடன் சேர்த்து 6 மில்லிமீற்றர் (6mm) அளவிலான தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இரும்புக்கம்பிகளுக்கான இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழ் இன்றி, இந்த இரும்புக்கம்பித் தொகுதியை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்த காரணத்தினால், குறித்த நிறுவனத்திற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல், SLS இலட்சினை இன்றி தரமற்ற உருக்குக் கம்பிகளை உற்பத்தி செய்த குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.