2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கடல் வழியாக பீடி இலை கடத்தல் முயற்சி – கடற்படை அதிரடி!

உள்ளூர்May 11, 2026 · 3 months முன்2

கற்பிட்டி, ஆலங்குடா பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சுமார் 622 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி, பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டிங்கி படகு மற்றும் பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.