2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

யாழ் வட்டுக்கோட்டையில் இளைஞர் மீதுதான தாக்குதல்

உள்ளூர்April 13, 2026 · 4 months முன்1

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

ஒரே கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடு இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்றிரவு குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்திற்கு அருகில் மூன்று நண்பர்களுடன் வந்த சந்தேகநபர் உயிரிழந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேகநபர் தப்பி செல்ல முற்பட்டபோது படுகாயமடைந்த இளைஞர் அவரை தடுத்த போது, சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்தே, குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்ததாக கூறப்படும் சந்தேகநபர் மருத்துவமனையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தது.