2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

2026 உயர்தர மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 28 வரை!

உள்ளூர்July 15, 2026 · 1 month முன்1


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 அதற்கமைய, தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.