2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

யாழில். வாகன விபத்து

உள்ளூர்January 13, 2026 · 7 months முன்0

யாழ்ப்பாணத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த பஸ் நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் தெரியாத நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்தை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக பயணித்த குறித்த வாகனம் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அண்மித்த சந்தி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிலைய கட்டடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவத்திடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , விபத்துக்கு உள்ளான வாகனத்தினையும் மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.

வாகனம் தொடர்பிலும் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.