2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மிரிஹானையில் போலி நாணயத்தாள் அச்சகம் முற்றுகை!

உள்ளூர்August 9, 2026 · 6 days முன்1

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு திசை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேல் மாகாண தெற்கு திசை குற்றப் குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, மிரிஹானை, கோட்டே வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது போலியாக அச்சிடப்பட்டிருந்த 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் 07, 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் 06, 500 ரூபாய் நாணயத்தாள் 01, கணினியொன்று, ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவராவார். அவர் இன்று (09) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.