2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

16 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

உள்ளூர்May 14, 2026 · 3 months முன்0

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையால், 5 மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளையில் பசறைக்கும், காலியில் நெலுவ பிரதேசத்துக்கும், களுத்துறையில் அகலவத்தை, பதுரலிய, மதுகம, ஹொரணை மற்றும் வளல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில், பஸ்பாகே கோரளை, யட்டிநுவர, உடபளாத்த, பாத்தஹேவஹேட, பன்வில, கங்க இஹலகோரல, கங்கவட்டகோரல மற்றும் அக்குரண ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரியில் பெல்மதுல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.