கிம் ஜாங் ஐ சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய ஜனாதிபதியை மீண்டும் சந்திப்பதற்கு ஆர்வமாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
– இது தொடர்பாக ட்ரம்ப் தெரிவிக்கையில்,
எனது முதல் பதவிக்காலத்தில் மூன்று முறை கிம் ஜாங் உன்- ஐ சந்தித்தேன். மீண்டும் ஒரு நாள் நான் அவரைப் பார்ப்பேன். அவரை சந்திப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருடன் இந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புகிறேன்.
நானும், கிம்மும் எங்கள் சந்திப்புகளின் போது மிக அன்பாக பழகினோம். இது பதற்றங்களைக் குறைத்தது, ஆனால் நீடித்த ஒப்பந்தத்தை உருவாக்க தவறிவிட்டது” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.




