2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

நெருக்கடிகளை சமாளிக்க பொறுப்புகளை செயலாக்கமாக மாற்ற வேண்டும் – ஹரிணி

உள்ளூர்September 2, 2026 · 1 week முன்19
நெருக்கடிகளை சமாளிக்க பொறுப்புகளை செயலாக்கமாக மாற்ற வேண்டும் – ஹரிணி

“ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இன்றைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல. நாம் எமது விழிப்புணர்வைக் கூட்டுச் செயல்பாடாகவும், எமது பொறுப்புகளை அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

பூட்டானில் நேற்று (01) நடைபெற்ற உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின், “தருணத்திற்கு ஏற்றவாறு எழுச்சி பெறுதல் – பலவித நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” (Rising to the Moment – Igniting Consciousness to Address the Polycrisis) எனும் தலைப்பிலான உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதாவது, காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறையைப் புத்தாக்கப்படுத்துதல், பொறுப்புமிக்க நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும் ஊட்டச்சத்திற்கான சமமான வாய்ப்புகள் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் மீள்திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்தன்மை வாய்ந்த அதேவேளையில் நியாயமான உணவு முறைமைகளைக் கட்டியெழுப்புவதாகும். 

அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து முன்னோக்கிச் செல்லும் ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக சர்வதேச ஒத்துழைப்பையும், காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்ப அணுகலையும் நாம் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.