2026 September 1, Tuesday ⛅ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 32° ⛅ கண்டி 30° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நேபாளத்திற்கு இலங்கையின் 1 மில்லியன் மனிதாபிமான உதவி!பயாகல சம்பவம் – சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் சிக்கியது!குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புதிய நியமனம்!முழு நீதிபதிகள் அமர்வு வேண்டுமா? தீர்மானம் விரைவில்!வறட்சிக்குப் பின் பெருமழை – இலங்கைக்கு புதிய எச்சரிக்கை!22வது திருத்தம்: இன்று உயர்நீதிமன்றத்தில் முக்கிய பரிசீலனை!மழையுடன் பலத்த காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் விசாரணைக்கு!

பயாகல சம்பவம் – சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் சிக்கியது!

உள்ளூர்September 1, 2026 · 41 minutes முன்2
பயாகல சம்பவம் – சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் சிக்கியது!

பயாகல, கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், இன்று (01) காலை தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலதூவ பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (31) இரவு பயாகல பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான “பானந்துரே நிலங்க” என்பவரின் மைத்துனரான “டிலா” என அழைக்கப்படுபவர் ஆவார்.