2026 September 10, Thursday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 32° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
சட்டவிரோத சொத்து விசாரணையில் ரூ.100 மில்லியன் வீடுகள் சிக்கின!வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!தேர்தல் நடத்தப்படாவிட்டால் கடுமையான முடிவு – எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை!ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!ஈரான் கடலோரப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்!மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத்தை இழந்த இலங்கை – 20 மில்லியன் டொலர் வருவாய் பாதிப்பு!சிறைக் கொடுமைகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடுத்த சோதனை – IMF குழு இலங்கையில்!

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

உள்ளூர்September 10, 2026 · 52 minutes முன்3
வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (10) இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பானது பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. 

தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அங்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார். 

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை மற்றும் குடும்ப வருமான மட்டம் என்பற்றில் நாட்டின் தற்போதைய பணவீக்க நிலைமை மற்றும் நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன செலுத்தும் தாக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. 

அவ்வாறே, குறித்த பிரதேசங்களில் நிலவும் அடிப்படை பௌதீக வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது. 

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள், தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள அணுகல், பாடசாலைக் கல்வி மற்றும் பிள்ளைகளின் போசாக்கு மட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டன. 

அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை ரீதியிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் இங்கு பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவற்றுக்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். 

மேலும், இப்பிரதேசங்களில் வாழும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவது தொடர்பிலும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது. 

இந்தசந்திப்பில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம்.தாஹிர்,இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமா லெப்பை, செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.