2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி

உள்ளூர்February 9, 2026 · 6 months முன்3
சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி

2020/21 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. 

நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

14 வது மகாத்மா காந்தி கல்விப்புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் : 

நாங்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் என்றால், அந்த மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நாம் மாறினால் மாத்திரமே நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைய முடியும். 

அந்த மாற்றத்திற்கு நீங்கள் தலைமை தாங்குங்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அதனை முதலில் உங்களிலிருந்து தொடங்க வேண்டும். நீங்கள் எத்தகையதொரு நாட்டை உருவாக்க நினைக்கிறீர்கள்? எத்தகைய சமூகத்தில் வாழ எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் உங்களிடம் இருக்கிறதா என்று நாம் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அந்த மாற்றத்திற்காக முன்நிற்பதன் மூலமே எம்மால் சமூகம், நாடு மற்றும் உலகத்தை மாற்ற முடியும். தற்போதைய தருணம் எமது கல்வி முறை மற்றும் பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒரு உருமாற்றத்தை நோக்கிய மாற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு காலப்பகுதியாகும். என்றார்.