2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 27° ☀️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – 878 பேர் போதைப்பொருட்களுடன் கைது

உள்ளூர்February 9, 2026 · 6 months முன்2
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – 878 பேர் போதைப்பொருட்களுடன் கைது

நாடாளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 878 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 881 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 02 பேர் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 415 கிராம் ஹெரோயின், 565 கிராம் ஐஸ், 159 கிராம் 490 மில்லிகிராம் கொக்கெய்ன், 07 கிலோகிராம் 966 கிராம் கஞ்சா, 528 கஞ்சா செடிகள், 01 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 118 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 3,403 போதை மாத்திரைகள், 40 கிலோகிராம் 26 கிராம் 280 மில்லிகிராம் மதளமோதகம் மற்றும் 614 கிலோகிராம் 288 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.