2026 August 15, Saturday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 30°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இலங்கையின் மேசைப்பந்து வீரரான டாவி சமரவீர நாட்டிற்கு வருகை

விளையாட்டுJanuary 26, 2026 · 7 months முன்1

உலகில் 11 வயதுக்குட்பட்டோருக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள இலங்கையின் மேசைப்பந்து வீரரான டாவி சமரவீர, பஹ்ரைன் மற்றும் கட்டாரில் நடைபெற்ற உலக தரவரிசைப் போட்டிகளில் மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தார்.

ஜனவரி 14 முதல் 18 வரை பஹ்ரைனில் நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து தரவரிசைப் போட்டியில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல், ஜனவரி 19 முதல் 25 வரை கட்டாரின் டோஹாவில் நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து போட்டியில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று மற்றுமொரு தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

டாவி சமரவீர கொழும்பு சென் தோமஸ் கல்லூரியில் தரம் 6இல் கல்வி பயிலும் 10 வயது மாணவனாவார். இவரது பயிற்சியாளர் தந்தை ஹசித சமரவீர ஆவார்.

இவர்கள் ஓமானின் மஸ்கட்டில் இருந்து சலாம் எயார் (Salam Air) நிறுவனத்திற்கு சொந்தமான OV-437 விமானம் மூலம் இன்று அதிகாலை 03.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இவர்களை அன்புடன் வரவேற்றதுடன், டாவி சமரவீரவின் தாய், சகோதரன் மற்றும் இலங்கை மேசைப்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் தயா சமரவீர ஆகியோரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.