நாட்டின் இன்றைய வானிலை !

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், இந்த நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது




