2026 September 15, Tuesday ⛅ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
ஊழலுக்கு கட்சிப் பேதமின்றி நடவடிக்கை – ஹரிணி!நெல் கொள்முதல் தடைப்படாமல் தொடர அரசு நடவடிக்கை!MiG போர் விமானக் கொள்முதல் – மீண்டும் சூடு பிடிக்கும் விசாரணை!ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு பிரதமரின் செய்தி!இன்று இரவு வரை பலத்த மின்னல் எச்சரிக்கை!மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்!பள்ளிக் கல்வியில் பெரிய மாற்றம் – புதிய பாடத்திட்டம் தயாராகிறது!தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு மெகா வேலைவாய்ப்பு!

தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு மெகா வேலைவாய்ப்பு!

உலகம்September 15, 2026 · 8 hours முன்10
தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு மெகா வேலைவாய்ப்பு!

தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது. 

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்காக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இரு விசேட ஒப்பந்தங்கள் நேற்று (14) கையெழுத்தாகியுள்ளன. 

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தாய்லாந்து விஜயத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான தொழிலாளர் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.