2026 September 11, Friday 🌧️ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
பம்பலப்பிட்டி ரயில் நிலையம் புதுப்பொலிவில்!மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் – கோட்டாபயவிடம் வாக்குமூலம்இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்கிறது – பாகிஸ்தான் 268 ஓட்டங்கள் பின்னிலை!போர் பதற்றம் தீவிரம் – கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!தெஹிவளையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை – கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கொந்தளிப்பு எச்சரிக்கை!உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின் ராஜ்நாத் சிங் புறப்பட்டார்!புதிய ஐபோன்களுடன் ஆப்பிளின் அடுத்த தலைமுறை தொடக்கம்!

போர் பதற்றம் தீவிரம் – கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!

உலகம்September 11, 2026 · 2 hours முன்5
போர் பதற்றம் தீவிரம் – கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்து வருகின்றது. 

இதன்படி, இன்று (11) காலை வேளையில் உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களையும் கடந்து பதிவாகியுள்ளது. 

இது கடந்த மே மாதத்திற்கு பின்னர் பதிவாகும் அதிகூடிய விலையாகும். 

கடந்த ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு, கடந்த 9 ஆம் திகதி பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர் எல்லையைக் கடந்த நிலையில், அன்றிலிருந்து தொடர்ச்சியாக இவ்வாறு எண்ணெய் விலை உயர்ந்து வருகின்றது. 

பிரெண்ட் எண்ணெய் விலை உயர்வுக்கு இணையாக, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 103.34 டொலராக உயர்ந்துள்ளது. 

அத்துடன், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122.48 டொலராகப் பதிவாகியுள்ளது.