2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பொசன் பௌர்ணமி தினம் இன்று!

உள்ளூர்June 29, 2026 · 2 months முன்1

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும். மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான தேசிய பொசன் பௌர்ணமி நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்து, தேவநம்பியதிஸ்ஸ மன்னன் உள்ளிட்டோருக்கு பௌத்த தர்மத்தை போதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்றைய போன்றதொரு பௌர்ணமி தினத்திலேயாகும். அன்றிலிருந்து இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டு, நாட்டின் சமய, சமூக மற்றும் கலாசார ரீதியில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 18 கலைகளில் நிபுணத்துவம் பெற்ற சங்கமித்தை உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு விஜயம் செய்ததை அடுத்து, இலங்கையில் பௌத்த தர்மத்துடன் தொடர்புடைய கலாசாரமும், நீர்ப்பாசனக் கட்டமைப்பும், விவசாயத்தை மையமாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பும் மேலும் வலுப்பெற்றன.