2026 August 15, Saturday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 30°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நாடு முழுவதும் ஓகஸ்ட் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள்!

உள்ளூர்May 20, 2026 · 3 months முன்1

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்,

நவம்பர் மாதம் வரை தேவையான எரிபொருள் கொள்வனவுகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கமைய, அமெரிக்காவிலிருந்து 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று இம்மாதம் 28 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன், மற்றொரு மசகு எண்ணெய் கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போது நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாகவும் மயூர நெத்திகுமாரகே இதன்போது சுட்டிக்காட்டினார்.