இந்தியா – சீனாவுக்கு: ட்ரம்ப் எச்சரிக்கை !

ரஷ்யா – உக்ரைன் போர் தொடருவதற்கு இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் மசகு எண்ணெயை இந்த இரு நாடுகளும் அதிகளவில் வாங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு நிதயுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார்.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐ.நா பொதுச் சபை 80வது கூட்டத்தில் பேசியதில், இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவின் எரிவாயு, எண்ணெய் இறக்குமதிகளை தொடர்ந்தும் செய்வதால், ரஷ்யா–உக்ரைன் போருக்கு நிதியுதவி வழங்குவோர் என்று குற்றம்சாட்டினார்.
நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எரிமல்ன் வாங்குவதை நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்; இல்லையெனில் அமெரிக்கா தானே கடுமையான வரிகள் விதிப்பதற்கு தயாராக இருக்கும் என்று தெரிவித்தார்.




