2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்களுடன் மூவர் கைது

உள்ளூர்December 26, 2025 · 8 months முன்1
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்களுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 86 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் 3 இலங்கை பயணிகள் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உற்சவ காலத்தை இலக்காகக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவர்களில் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மற்றும் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பெண் வர்த்தகர்களும் உள்ளடங்குகின்றனர்.

சந்தேகநபர்களின் பயணப் பொதிகளிலிருந்து , 44,000 வெளிநாட்டு சிகரெட்டுகள்,19 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் அத்துடன் சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியற்ற 430 “கொலாஜன்” பாக்கெட்டுகள், காலணிகள் மற்றும் ஏனைய வர்த்தகப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.