2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள்

உள்ளூர்February 22, 2026 · 6 months முன்2
இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள்

இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களுள் துரைராசா அருண்குமார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர் தரத்தில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர்.

வாழ்வக வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகள் பெற்று சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இற்றைவரை இவருக்கே உரியதாகின்றது.

இருபார்வையினையும் இழந்த இரண்டு மாணவர்களும் நீண்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.