2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்0
வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இன்று 71 வயதுடைய வினோதா ஜெகநாதன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டிலிருந்த பணிப்பெண் வெளியே சென்று திரும்பியபோது அவர் காணாமல் போன நிலையில் கிணற்றில் சடலமாக இருப்பதை கண்டுபிடித்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினார். சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவு மற்றும் தலைமையகப் பொலிஸார் வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.