2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

போதைப்பொருள் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்1
போதைப்பொருள் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

போதைப்பொருள் தொடர்பாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 354 கிராம் ஹெரோயின், 529 கிராம் ஐஸ், 124 கிலோகிராம் 282 கிராம் கஞ்சா, 115,172 கஞ்சா செடிகள், 14 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 284 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 791 போதை மாத்திரைகள், 42 கிராம் 700 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 1 கிலோகிராம் 598 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 1025 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 1025 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 20 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.