2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்

உலகம்December 26, 2025 · 8 months முன்0
குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், அதிகாலை சுமார் 4.30 மணியளவில் அதிர்வு உணரப்பட்டதாகவும் NCS கூறியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மற்றும் ஆழம் தொடர்பான மேலதிக தொழில்நுட்ப தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நில அதிர்வால் மக்கள் மத்தியில் சிறிதளவு அச்சம் ஏற்பட்டிருந்தாலும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்து எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

மேலும், குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி அதிக நிலநடுக்க அபாயம் உள்ள மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பிரதேசத்தில் அவ்வப்போது சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். தற்போதைய நிலைமையை உள்ளூர் நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.