2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

சமூக ஊடக மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!

உள்ளூர்January 8, 2026 · 7 months முன்2

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பாரியளவிலான பண மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை பொலிஸார் புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்றை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்துள்ளனர்.

இந்த விசேட தடுப்பு நடவடிக்கையானது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நேரடி வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் நபர்களைக் கண்டறிவதும், இவ்வாறான சூழ்ச்சி வலைகளில் சிக்காமல் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் வரும் ஆசை வார்த்தைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் நிதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்களை நுணுக்கமாகக் கண்டறியும் தொழில்நுட்ப வசதிகள் இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.