2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

26 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் ஆசிய ரக்பி தொடர் நடத்த வாய்ப்பு!

விளையாட்டுDecember 25, 2025 · 8 months முன்2
26 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் ஆசிய ரக்பி தொடர் நடத்த வாய்ப்பு!

026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட 15 பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரை இலங்கைக்கு நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது, என்று ஆசிய ரக்பி சம்மேளனம் நேற்று (24) மாலை அறிவித்தது.

சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை மீண்டும் ஆசிய இளையோர் ரக்பி தொடர் நடத்தும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கை இத்தொடரை நடத்தியிருந்தது.

அந்த ஆண்டில், ஜீவன் குணதிலக்கவின் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அதனால், சிலியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ரக்பி தொடருக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இலங்கை அந்த ஆண்டு பெற்றது.