அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை அடையாள வேலைநிறுத்தம்!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் நாளை (09) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
விரிவுரையாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



