2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

உலகம்February 2, 2026 · 6 months முன்2

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு வீட்டு திட்டத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் இரண்டு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு வழக்கு நிலம் வழங்கியதில் முறைகேடு. மற்றொரு வழக்கு ரஜுக் புதிய நகரம் திட்டத்தின் கீழ் பிளாட் ஒதுக்கியதில் முறைகேடு ஆகும்.

அவரது மருமகள் துலிப் ரிஸ்வானா சித்திக் என்பவருக்கு இரண்டு வழக்குகளிலும் தலா 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், அஸ்மினா சித் ஆகியோருக்கு இரண்டு வழக்குகளிலும் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.