2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1,500 விமான சேவைகள் ரத்து

உலகம்December 29, 2025 · 8 months முன்2
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1,500 விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை நியூயோர்க் நகரில் சுமார் 4 அடி உயரத்துக்கு பனி பொழிந்தது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து அல்லது தாமதமாகியுள்ளதாகவும் (FlightAware) தகவல் வெளியிட்டது.

நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேயர் எரிக் ஆடம்ஸ், பனி அகற்றும் பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதாகவும், நகரம் அதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பனிச்சரிவுகள் யோசமைட்டி தேசிய பூங்கா மற்றும் மவுண்ட் ரோஸ் ஸ்கீ ரிசார்ட் பகுதிகளில் ஏற்பட்டுள்ளன; இதில் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர் மற்றும் ஒரு பனிச்சறுக்கு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். இதே சமயம், அமெரிக்கா முழுவதும் குளிர் அலை மற்றும் விமான போக்குவரத்து தாமதங்கள் தொடர்கின்றன.