2026 August 30, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
நுவரெலியாவில் குடும்பத் தகராறு – பெண் உ#யிரிழப்பு!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இலங்கை துணை!காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஒன்றுதிரண்ட உறவுகள்!கொழும்பில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு மலர்மாலை மரியாதை!பலத்த காற்று, மின்னல் தாக்கம் – மக்களுக்கு எச்சரிக்கை!காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளைப் புறக்கணிக்க தமிழரசுக் கட்சி தீர்மானம்.பொலன்னறுவை நீர்த்தேக்கங்களில் வேகமாக குறையும் நீர்மட்டம்!இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஒன்றுதிரண்ட உறவுகள்!

உள்ளூர்August 30, 2026 · 2 hours முன்5
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஒன்றுதிரண்ட உறவுகள்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள், உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.

உலகளவில் அதிகளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதி கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னேறிய பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.