இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புது டெல்லியில் நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில், இருவரும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரைடியுள்ளனர்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், அண்டை நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வழிநடத்தும் முக்கியக் கட்டமைப்பான ‘இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களும் இந்த சந்திப்பின்போது மதிப்பீடு செய்யப்பட்டன.
மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




