2026 August 30, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
நுவரெலியாவில் குடும்பத் தகராறு – பெண் உ#யிரிழப்பு!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இலங்கை துணை!காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஒன்றுதிரண்ட உறவுகள்!கொழும்பில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு மலர்மாலை மரியாதை!பலத்த காற்று, மின்னல் தாக்கம் – மக்களுக்கு எச்சரிக்கை!காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளைப் புறக்கணிக்க தமிழரசுக் கட்சி தீர்மானம்.பொலன்னறுவை நீர்த்தேக்கங்களில் வேகமாக குறையும் நீர்மட்டம்!இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

நுவரெலியாவில் குடும்பத் தகராறு – பெண் உ#யிரிழப்பு!

உள்ளூர்August 30, 2026 · 19 seconds முன்0
நுவரெலியாவில் குடும்பத் தகராறு – பெண் உ#யிரிழப்பு!

மனைவியின் தலையில் கோடரியால் தாக்கிவிட்டு கணவன் பொலிஸில் சரணடைந்த சம்பவமொன்று நுவரெலியா பகுதியில் பதிவாகியுள்ளது. 

குடும்ப முரண்பாடு காரணமாக மனைவியின் தலையில் கோடரியால் தாக்கி காயப்படுத்திவிட்டு, தானே பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

காயமடைந்த நிலையில் இருந்த மனைவி, பிரதேச மக்களால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலந்த, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.