2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

கனமழையால் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

உள்ளூர்October 19, 2025 · 10 months முன்0
கனமழையால் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 

 

பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளைத் திறக்க பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கப் பொறியாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 5,190 கன அடி நீர் திறந்து விடப்படுவதாகக் கூறப்படுகிறது. 

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த இன்று 04 வான்வழிகள் திறக்கப்பட்டதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. 

 

இதேவேளை, கலா வாவியின் இரண்டு வான் கதவுகளும் தலா இரண்டு அடி உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

அதன்படி, கலா வாவியிலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 3,447 கன அடி நீர் திறக்கப்படும் என்று நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்தார். 

 

தம்புலு ஓயா உள்ளிட்ட மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கலா வாவி நீர்த்தேக்கத்திற்கு மணிக்கு 4,545 அடி நீர் கொள்ளளவு கிடைப்பதாக கலா வாவி மற்றும் போவதென்ன நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் புத்திக நவரட்ன தெரிவித்துள்ளார். 

 

ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலும் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

 

கலா ஓயாவில் வினாடிக்கு 4,990 கன அடி நீர் திறந்து விடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

 

அதிலிருந்து வினாடிக்கு 2,824 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.