2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

இந்தோனேசியாவில் மண்சரிவு : 10 பேர் பலி

உலகம்January 26, 2026 · 7 months முன்1
இந்தோனேசியாவில் மண்சரிவு : 10 பேர் பலி

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தின் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தொடர்ச்சியான கனமழை காரணமாக மேற்கு ஜாவாவின் மேற்கு பாண்டுங் பகுதியில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை அதிகாலை மண்சிரிவு ஏற்பட்டது. இதனால் பல குடியிருப்புகள் மண்ணில் புதைந்ததுடன், பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கனமழை காரணமாக இரவு முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் அந்நாட்டு மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேற்கு ஜாவா மாகாணத்தின் பல பகுதிகளில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவையும் உள்ளடக்கிய வகையில் வெள்ளப்பெருக்குகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.