வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’ (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல் காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டு 12,000 டி-ஷர்ட்டுகளை விநியோகித்தமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலான நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதையும், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த சர்வதேச தலையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.




