2026 September 19, Saturday ⛅ கொழும்பு 29° ⛈️ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
11 வயது சிறுவனின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை!மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயம் – பொதுமக்களுக்கு அறிவுரை!இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat Belt கட்டாயம்!உலகிற்கே தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் இலங்கை – ஹரிணியின் இலக்கு!ஜப்பானின் நீண்டகால குறைந்த வட்டி கொள்கைக்கு மேலும் பின்னடைவு!விளக்கமறியல் நீட்டிப்பு – நாமலுக்கு அடுத்த தீர்ப்பு 29ஆம் திகதி!ஆசிய விளையாட்டில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!“பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பாதையில்” – ஜனாதிபதி அநுர

மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயம் – பொதுமக்களுக்கு அறிவுரை!

உள்ளூர்September 19, 2026 · 3 hours முன்2
மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயம் – பொதுமக்களுக்கு அறிவுரை!

இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.