2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தியா – பாகிஸ்தான் வான்பரப்புத் தடை நீடிப்பு

உலகம்April 24, 2026 · 4 months முன்2
இந்தியா – பாகிஸ்தான் வான்பரப்புத் தடை நீடிப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான வான்பரப்புத் தடை உத்தரவு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் வான்பரப்புத் தடையை விதித்திருந்தன.

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கும், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கும் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டது.

தற்போது நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற் கொண்டு, இந்தத் தடையை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.