2026 August 19, Wednesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ☀️ மட்டக்களப்பு 31°
LIVE
வெளியில் பணியாற்றுவோருக்கு அதிக அபாயம்!அதிகரிக்கும் வெப்பம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!22வது திருத்தம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் முக்கிய நகர்வு!22வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்!கட்டுநாயக்கவில் நீர்த்தாரை மரியாதையுடன் வியட்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு!பெரஹராவை முன்னிட்டு வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் STF வசம் சிக்கினார்!மேல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வெளியில் பணியாற்றுவோருக்கு அதிக அபாயம்!

உள்ளூர்August 19, 2026 · 1 hour முன்3
வெளியில் பணியாற்றுவோருக்கு அதிக அபாயம்!

நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளி நேரடியாக உடலில் படுவதால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என்றும், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

சிறுவர்கள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், குறிப்பாக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளியில் அதிக நேரம் நடமாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், போதுமான அளவு நீர் அருந்துமாறும், இளநிற ஆடைகளை அணியுமாறும் சுகாதார அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.