2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் !

உலகம்April 9, 2026 · 4 months முன்1
வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் !

இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள டெலிகிராம் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: “எமது நாட்டிற்கும் எமது மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய – அமெரிக்க ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படும் வரை இவ்வாறான பதிலடித் தாக்குதல்கள் தொடரும்.” 

 இதேவேளை, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை வானிலேயே அழித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.