2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மத்திய கிழக்கு போர் பதற்றத்தின் எதிரொலி

உலகம்May 31, 2026 · 3 months முன்2
மத்திய கிழக்கு போர் பதற்றத்தின் எதிரொலி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் புதிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

உலகளாவிய எரிசக்தி சந்தைத் தரவுகளின்படி, அமெரிக்காவின் தரக்குறியீட்டு மசகு எண்ணெய்யான WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.36 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.12 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதனிடையே, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.290 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை உலக எரிசக்தி சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.

உலக சந்தை விலைகளின் இந்த மாற்றங்கள், எரிபொருள் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.