
janani
May 6, 2026
விளையாட்டு
LPL - வெளிநாட்டு வீரர் பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ளது.இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை இதற்காகப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankacricket.lk ஊடாக இந்த இணையவழிப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
லங்கா பிரீமியர் லீக் தொடரை நாட்டின் நான்கு பிரதான மைதானங்களாகிய ,கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மற்றும் ஆர். பிரேமதாச மைதானம், கண்டி பல்லேகல மற்றும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடர் எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All




