
janani
Mar 20, 2026
விளையாட்டு
மழை காரணமாக விளையாட்டு நிலைமை மாற்றங்கள் ஏற்படலாம்

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது.
எனவே, மழை காரணமாக போட்டி தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்திற்குள் முழு போட்டி நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், 5 ஓவர்களுக்குக் கூட போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்த போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இறுதிப்போட்டிக்கு மாத்திரம் மேலதிக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மழையால் போட்டி நடத்த முடியாவிட்டால், அடுத்த நாள் நடைபெறும் என்றும் அதிலும் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி செம்பியனாக அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் இவ்வாறான சந்தர்ப்பம் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





